search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் பிரை"

    • மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி.
    • மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- 500 கிராம்

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    தக்காளி- 2 (நறுக்கியது)

    இஞ்சி-பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    தனியா- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    முந்திரி பருப்பு- 10

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    லவங்கம்- 3

    பட்டை - 2

    ஏலக்காய்- 2

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போட வேண்டும். வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை போட்டு அனைத்தையும் கலந்து வறுக்க வேண்டும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். வேண்டும் என்றால் சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்.

    மற்றொரு பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கனில் முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.

    ×